
யாழ். பல்கலைக்கழக தலைவர் கலாநிதி சி.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தமிழ்மொழி இலக்கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் நூலினை பெற்றுக் கொண்டனர்.

நூல் வாழ்த்துரையை பொருளியல்துறைத் தலைவர் வித்தியானந்தன் வழங்கினார்.
நூல் வெளியீட்டுரையை விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஆற்றினார்.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நூலின் அறிமுக உரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் வழங்கினார்.
மதிப்பிட்டு உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாச்சாலை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு பேராசிரியர் சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.
படங்கள்: யாழ். பாலன்